நியாயவிலைக் கடையில் பொருட்கள் பற்றாக்குறை என புகார் வந்ததையடுத்து ஆட்சியர் அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சாலாமேடு சீனிவாசநகரில் இருக்கும் நியாய விலை கடையில் பாமாயில் சரிவர கிடைக்கவில்லை என பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்ததன் காரணமாக மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடம் அத்தியாவசிய பொருட்கள் சரியாகவும் உரிய நேரத்திலும் கிடைக்கிறதா என கேட்டுக்கொண்டார். இதையடுத்து உணவு விநியோகப் பிரிவு துணை பதிவாளர் அலுவலகத்திற்கு ஆட்சியர் சென்று மாதம்தோறும் உணவு […]
