முறையான சிகிச்சை அளிக்காததால் தன் வலது காலை இழந்த பேருந்து ஓட்டுனர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் வடக்கூர் மேலத்தெருவில் வசித்து வரும் ஜோதி என்பவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மாதம் 4ஆம் தேதி ஜோதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ஜோதிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. […]
