வார சந்தையில் ஒரே நாளில் 1,00,000 ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் வாரம் தோறும் புதன்கிழமை அன்று பேரூராட்சி சார்பாக ஆடு சந்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆடுகளை வாங்குவதற்கும் மற்றும் விற்பதற்கும் கூட்டம் அலைமோதி வருவது வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணத்தால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சந்தை இயங்காமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது தொற்று குறைந்து வந்த நிலையில் […]
