ஆடு மேய்த்து கொண்டிருந்தவர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள அ.ரெங்கநாதபுரம் பகுதியில் போதுமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆடுகளை மேய்ப்பதற்காக வாடிப்பட்டி அருகே உள்ள 18ஆம் கால்வாய் பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கால்வாய் அருகே நின்று கொண்டிந்தபோது திடீரென கால் தவறி கால்வாயில் விழுந்துள்ளார். இதனையடுத்து தண்ணீரில் இருந்து வெளியே வரமுடியாமல் தத்தளித்து உயிரிழந்துள்ளார். இதனைதொடர்ந்து போதுமணி உடல் கால்வாயில் மிதப்பதை பார்த்த […]
