ஆடு திருடிய 3 வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆடுகள் காணாமல் போனதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையிலான காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை […]
