ஆடுகளை திருடிச் சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் குணசேகரன் வீட்டில் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து குணசேகரன் வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் அதே பகுதியில் வசிக்கும் இரண்டு வாலிபர்கள் […]
