திருச்செந்தூர் கடற்கரை ஓரம் அமைந்திருக்கும் அய்யாவைகுண்டர் அவதாரபதியில் 190வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா சென்ற மாதம் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழா நாட்களில் தினசரி அய்யாவைகுண்டர், புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம் ஆகிய பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கியமான நிகழ்வான தேரோட்டம் 11ஆம் திருநாளான நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு உகப்படிப்பு, […]
