டாஸ்மாக் கடைகள் இன்று ஒரு நாள் மட்டும் இயங்காது என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி பகுதியில் சுகந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் தீரன் சின்னமலையின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து இன்று ஆடிப்பெருக்கு விழா என்பதால் பொதுமக்கள் கூட்டமாகச் சென்று மேட்டூரில் உள்ள நீர்நிலைகளில் குளிப்பதற்காக செல்வது வழக்கம். […]
