ஆஞ்சிநேயர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணியதில் 29 லட்சம் இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் உண்டியலில் உள்ள பணம் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டுள்ளது. அப்போது கோவிலின் செயல் அலுவலர் […]
