தமிழகம் முழுவதும் இன்று ஹனுமான் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. இதையடுத்து அலங்கரிக்கப்பட்டிருந்த ஆஞ்சநேயர் இன்று அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதி வேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகின்றனர். […]
