கர்நாடகா மாநிலம் குனிகெரி கிராமத்தில் ஹுச்சம்மா சௌத்ரி என்பவர் வசித்து வருகிறார். மூதாட்டியான இவரது கணவர் பசப்பா சௌத்ரி 30 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து இவர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து ஹுச்சம்மா சௌத்ரி வாழ்க்கை நடத்தி வந்தார். இந்நிலையில் கிராமத்தில் உள்ள சிறுவர்களுக்காக பள்ளி கட்டுவதற்கு இடம் தேடப்பட்டு வந்தது. இதனை அறிந்த மூதாட்டி ஹுச்சம்மா உடனடியாக அவர்களைச் சந்தித்து ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கினார். அதன்பின் பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்காக […]
