ஆசிரியர் வீட்டில் திருடிய சிறுவனை மடக்கி பிடித்து பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கே.கே.நகர் பகுதியில் விஜயராஜா என்பவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் கொள்ளனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு காற்றுவரவில்லை என கதவை திறந்து வைத்துவிட்டு படுத்து துங்கியுள்ளார். இதனையடுத்து நள்ளிரவில் யாரோ வீட்டில் இருந்த பீரோவை திறக்கும் சத்தம் கேட்டு விஜயராஜாவின் மனைவி எழுந்துள்ளார். அப்போது சிறுவன் ஒருவன் பீரோவில் இருந்து […]
