சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமாபுரம் தென் சோலை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (42). இவர் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில் நேற்று காலை சரவணன் வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு கழிவறைக்குச் சென்ற அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர்கள் உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் […]
