சேலம் மாவட்டத்தில் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பூலாம்பட்டி ரோடு கோணபைப் என்ற இடத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான குடிமகன்கள் குவிந்துவிடுவர். இவர்கள் குடித்துவிட்டு அந்த வழியாக வரும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு ரகளைசெய்து வருகிறார்கள். இந்த டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று சுதந்திர தின விழாவை […]
