ஆக்கிரமித்து கட்டியிருந்த 6 வீடுகளையும் நகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை நகராட்சி பகுதியில் கழுத்தறுத்தான் பள்ளம் உள்ளது. இந்த உடுமலை பழனி சாலையில் இந்த பள்ளத்தை ஒட்டி நாராயணன் காலனி குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் மழைக்காலங்களில் இந்த ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் புகுந்து விடும். தற்போது உடுமலை வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் மூலம் உடுமலை நகராட்சி நூற்றாண்டு விழா நினைவாக கழுத்தறுத்தான் பள்ளத்தை தூர்வாரி […]
