திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான பல இடங்கள், நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஆகியவை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என தகவல் வந்தது. இந்த இடங்களை மீட்கும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டது தெரியவந்தது. எனவே தாளக்குடி பகுதியில் இருக்கும் திருக்கோயிலுக்கு சொந்தமான அந்த இடத்தை திருக்கோவிலின் இணை ஆணையர் குமாரவேல் தலைமையில் ஒரு குழு சென்று […]
