புதிதாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் கொண்டு செல்வதற்காக கடலும் ஆறும் கலக்கும் எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் புதிதாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. அப்பகுதியில் கோபுரங்கள் அமைக்கப்பட்டால் அங்கு வசிக்கும் 8 மீனவ கிராமத்தை சேர்ந்த 20 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்வதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் […]
