அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி போட்டு கொண்ட ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்த ஆசிரியர் சான்ட்ரோ டோஃனட்டி (57 வயது). இவர் சம்பவத்தன்று அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து மறுநாள் திடீரென அந்த ஆசிரியர் உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அந்நிறுவனத்தின் மீது கொலை வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனிடையே ஏற்கனவே பல நாடுகளில் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகள் […]
