பிரிட்டனில் கொரோனாவிற்கான அவரசகால நடவடிக்கைகளை மேலும் நீட்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா பாதிப்பிற்கான துரித நடவடிக்கைகளை மேலும் 6 மாதங்கள் வரை நீட்டிப்பதற்கான ஒப்புதலை பாராளுமன்றம் அளித்துள்ளது. மேலும் அவசரகால அதிகாரங்களை வரும் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க House of Commons ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனாவிற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கத்தை படிப்படியாக தளர்த்த அரசின் திட்டங்களையும் அங்கீகரித்துள்ளனர். எனினும் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்த நடவடிக்கைக்கு அவருடைய கட்சியின் உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் […]
