கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாட்டில் அவசர நிலை பிரகடனம் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்திருக்கிறார். கனடா மற்றும் அமெரிக்க எல்லையை கடந்து செல்லும் லாரி ஓட்டுனர்கள், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கட்டாயமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, லாரி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். மேலும், கனடா மற்றும் அமெரிக்காவை இணைக்கக் கூடிய தி அம்பாசிடர் என்ற முக்கிய பாலத்தில் லாரிகளை நிறுத்தி வைத்து முற்றுகையிட்டனர். இதனால், போக்குவரத்து கடும் பாதிப்படைந்தது. எனவே, […]
