சத்துணவு திட்டத்தின் நோக்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வழிவகுக்கிறது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குவதன் மூலம் கல்வித் தரத்தை மேம்படுத்துதல், பள்ளி பயிலும் மாணவ, மாணவியர் கல்வி இடைநிறுத்தம் செய்வதை தடுப்பதற்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 1 கோடி முட்டைகள் பள்ளிகளில் தேக்கமடைந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு […]
