தொடர் கனமழை காரணமாக கூடலூரில் மேரக்காய் கொடிகள் அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான ஸ்ரீமதுரை, முதுகலை ஊராட்சிகள், பாடந்தொரை, கம்மாத்தி, குற்றிமுற்றி, ஒற்றவயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேரக்காய் விவசாயம் நடந்து வந்தது. இதனிடையே தொடர் கனமழை பெய்ததன் காரணமாக ஏராளமான தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த மேரக்காய் கொடிகள் அழுகிவிட்டது. மேலும் சூறாவளி காற்று வீசியதால் பல இடங்களில் பந்தல்கள் சரிந்து மேரக்காய் கொடிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றது. மேரக்காய் விளைச்சல் […]
