சுரங்க பணியாளர்களை ஏற்றி சென்ற அலுவலகப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் அப்ருனிமெக் மாகாணத்தில் ஹடபம்பாஸ் என்னும் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரில் காப்பர் சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த காப்பர் சுரங்கத்தில் பல ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் காப்பர் சுரங்கத்தில் கடந்த 27 ஆம் தேதி வழக்கம் போல் வேலை முடிந்ததும் ஊழியர்கள் 18 பேரை ஏற்றிக்கொண்டு அலுவலகப் பேருந்து ஓன்று சென்றுள்ளது. […]
