மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண கோலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது அகவிலைப்படி மூன்று சதவீத உயர்வை மத்திய அரசு அளித்த தேதியில் இருந்து நிலுவையுடன் வழங்க வேண்டும், மேலும் மின்வாரிய அரசாணை இரண்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், அது மட்டுமல்லாமல் மின்வாரியம் பொது துறையாக […]
