சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரியில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்திரை மாதம் வரும் பவுர்ணமி சித்ரா பவுர்ணமி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நாளை மறுநாள் (சனிக்கிழமை) வருகிறது. அன்று மாலை ஆறு மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இந்த அரிய காட்சியைக் காண்பதற்கு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் அதிகமாக காணப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
