நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு வேலையின்மை பிரச்சினையால் பலரும் தவித்து வருகின்றனர். இருப்பினும் அரசு சார்பாக வேலை வாய்ப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை அரசு வேலை வாய்ப்புக்காக 67.23 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி வரையிலான பதிவு தொடர்பான தரவுகளை வேலைவாய்ப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அரசு வேலைக்காக 67 […]
