சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.14.5 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ள ஸ்டெம்செல் ஆராய்ச்சி மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பாலூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித்துறை ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி துறை சார்பில் 7 ஆராய்ச்சி கட்டுரைகளில் ஏற்கனவே உலகப்புகழ்பெற்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியில் பழைய சோறு சாப்பிடுவதன் […]
