அரசு பேருந்து மீது லாரி மோதியதால் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருந்து காலை 9 மணிக்கு அரசு பேருந்து ஒன்று எடக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் எம்.பாலாடா அருகே சென்று கொண்டிருந்த போது கேரட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் பயணி ஒருவருக்கு லேசான […]
