அரசு பேருந்து மீது கல்வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவெண்ணைநல்லூர் நோக்கி புறப்பட்டது. இந்த அரசு பேருந்து கள்ளுக்கடை மூலை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் திடீரென பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது கல் வீசினார். இதில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் நொறுங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். […]
