திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற மோகன் அரசு பேருந்து மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து மோகனின் தந்தை சுப்பிரமணி, தாய் கருப்பாயி ஆகியோர் இழப்பீடு கேட்டு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் […]
