மது அருந்திவிட்டு அரசு பேருந்தை சேதப்படுத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள மாணிக்கம்பாளையத்திலிருந்து கோலாரம் வரை செல்லும் அரசுப் பேருந்து ஒன்று புள்ளாகவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்துள்ளது. அப்போது மது போதையில் அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கேட்ட பேருந்து ஓட்டுநர் குமார் என்பவரையும் தாக்கி, பேருந்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தகராறில் […]
