ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயார் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றது. அந்த ஆணையம் அப்பல்லோ நிர்வாகத்திடம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த சூழலில், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அப்போலோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி […]
