மதுரை விளாங்குடி முத்துமாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்த தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி இருவரும் கூலித்தொழில் செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் பிரபாகரன் (14). ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். இரண்டாவது மகன் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றான். இந்த நிலையில் நேற்று காலை பிரபாகரன் பள்ளிக்கூடம் செல்வதற்காக அரசு டவுன் பஸ்ஸில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தில் கூட்டம் […]
