தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின், “அரசு ஊழியர்களுக்கு அதிகளவிலான சலுகைகளை வழங்கியது திமுக அரசு தான். நான் உங்களில் ஒருவனாக இருப்பேன். நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன். அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை. அதிகம் பேசமாட்டேன்; செயலில்தான் காட்டுவேன். அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அதில் நான் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளேன். […]
