மத்திய அரசு ஊழியரிடம் இருந்து மர்ம நபர் 2 லட்ச ரூபாய் நூதன முறையில் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகரில் பாலாஜி சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணலியில் இருக்கும் மத்திய அரசு நிறுவன தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பாலாஜியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர் தான் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து வங்கி கணக்கில் கூடுதலாக தகவல்கள் சேர்க்க […]
