அரசு பெண் ஊழியரிடம் நகை பறித்த வழக்கில் மேலும் ஒரு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் பகுதியில் சுப்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இவர் நாகர்கோவிலில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தேவியும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணும் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து மேம்பாலம் அருகில் வந்து கொண்டிருந்தபோது […]
