தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது .அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அவ்வாறு பொதுமக்கள் முக கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. கோவில்கள், அரசு விழாக்கள், […]
