அரசு போக்குவரத்து கழகங்களில் முறையாக பணி செய்யாமல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர பேருந்து கழகத்தின் சைதாப்பேட்டை பணிமனையில் நடத்துனராக பணி செய்து வந்த பாலச்சந்தர் என்பவர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். பணிநீக்கத்துக்கு ஒப்புதல் கோரி தொழிலாளர் நலத்துறை துணை ஆணையரை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் அணுகியபோது விசாரணை குறித்து தகவல் முறையாக இணைக்கப்படாததால் பணிநீக்கத்துக்கு […]
