புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி அதிகாரிகள் உரிய நேரத்தில் பணிக்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 9 மணிக்குள் செயல்படத் தொடங்கும். ஆனால் கடந்த சில மாதங்களாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் அதிகாரிகள் தாமதமாக பணிக்கு வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி ஒரு சில அதிகாரிகள் பணிக்கு வராததால் அது […]
