இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை அதிகரிப்பால் நாளையிலிருந்து பள்ளிகளும் அரசு அலுவலகங்களும் அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் முடக்கப்பட்டதால் மக்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், தினசரி 13 மணி நேரங்கள் மின் தடை ஏற்படுகிறது. எனவே, நாளை முதல் […]
