தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணை தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்தப்பட்டு அதன் […]
