சிவகங்கையில் மகளிர் தினத்தை முன்னிட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நீதிபதி தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப் பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களிலும் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு மாவட்ட நீதிபதி ஆ.சுமதி சாய்பிரியா தலைமை தாங்கியுள்ளார். இதில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவமணி […]
