கன்னியாகுமரி மாவட்டம் தாழ்குடியில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அரசு பேருந்து கவிழ்ந்து 35 பேர் காயமடைந்துள்ளனர். புத்தேரி சாலையில் உள்ள சுமார் 40 அடி பள்ளத்தில் அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியாார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
