பிரேசிலில் 2 அரசியல்வாதிகள் குத்துச்சண்டையில் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக எந்த நாட்டு அரசியல்வாதிகளாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் தாக்கி கடுமையாக பேசிக்கொள்வார்கள். ஆனால், பிரேசிலில் அரசியல்வாதிகள் இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை குத்துச்சண்டையில் வந்து முடிந்திருக்கிறது. அதன்படி கலப்பு தற்காப்பு கலை மூலமாக அவர்கள் சண்டையிட்டுள்ளனர். அதாவது, கராத்தே, தாய் பாக்ஸிங், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஜூடோ மற்றும் ஜூஜிட்ஸு ஆகிய பல விதமான தற்காப்பு கலைகளை ஒரே சமயத்தில் பயன்படுத்தி சண்டையிடுவதற்கு பெயர் தான் […]
