சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்ற சசிகலாவுக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்பாக அதிமுகவை ஒன்றிணைப்பேன் என சொன்னீங்க. நாளுக்கு நாள் விரிசல் அதிகமாக இருக்கின்றது. நீங்க சொன்னது நடக்குமா என்பது குறித்த கேள்விக்கு சசிகலா, இப்பவும் அது தான் சொல்கின்றேன். நிச்சயமாக நடக்கும். நாங்கள் ஒன்றாக நிற்க முடியும். […]
