Categories
அரசியல்

“இனிக்காத பொங்கல்!”… ஸ்டாலின் மீது அதிருப்தியில் மக்கள்… கலக்கத்தில் தி.மு.க….!!!

தி.மு.க ஆட்சியில் பொங்கல் பரிசுடன் ரொக்கப்பணம் கொடுக்கப்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆட்சியில் 2500 ரூபாய் வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆட்சியிலும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ரொக்கத் தொகை வழங்கப்படும். எனவே, மக்கள் ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் அரசு தரும் தொகையை எதிர்பார்த்துக் காத்திருப்பர். ஆனால் இந்த முறை தி.மு.க ஆட்சியில் ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கொடுக்கப்பட்ட புளியில் பல்லி கிடந்ததாகவும், […]

Categories
அரசியல்

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சியை ஏற்படுத்துவோம்…. ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை….!!!

எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தமிழ்நாட்டில் எம்ஜிஆரின் பொற்கால ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார்கள். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், வாழ்க்கை என்ற பயணத்தில் பலர் வருவர், பலர் போவர் எனினும் சிலர் மட்டுமே நிலைத்து நிற்பர். அந்த வரிசையில் முதலமைச்சராக நம் உள்ளம் எல்லாம் நிறைந்திருந்தவர் எம்ஜிஆர் அவர்கள். ஏழ்மையான […]

Categories
அரசியல்

பொங்கல் பரிசால் தி.மு.க விற்கு சறுக்கலா…? அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்….!!

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான மா.சுப்ரமணியன், பொங்கல் பரிசுப்பொருள் வழங்கியதால் தி.மு.க அரசிற்கு சறுக்கல் ஏற்பட்டதா என்பது குறித்து பேசியிருக்கிறார். வானொலி நிலைய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது, கொரோனாவின் மூன்றாம் அலை பரவி வருகிறது. இது முதல் இரண்டு அலைகளை விட அதிகமாக பரவுகிறது. எனினும், அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பலி எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். மேலும், அவரிடம் பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு கொடுக்கப்பட்டதால் தி.மு,கவிற்கு  சறுக்கல் […]

Categories
அரசியல்

புகார் கொடுத்தவருக்கே ஆப்பு…. ராஜேந்திர பாலாஜி வழக்கில் அதிரடி திருப்பம்….!!!

பண மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய நல்லதம்பியை காவல்துறையினர் இன்று கைது செய்திருக்கிறார்கள். விஜய நல்ல தம்பி மீது இதற்கு முன்பு பண மோசடி புகார் அளிக்கப்பட்டிருந்தது. எனவே, காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தார்கள். இந்நிலையில், கோவில்பட்டிக்கு அருகில் இருக்கும் தனிப்படை காவல்துறையினரால் இன்று அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதாவது ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 30 லட்ச ரூபாய் […]

Categories
அரசியல்

தமிழ் வானொலிநிலையங்கள் அடைக்கப்படுகிறதா…? எம்.பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

மத்திய அரசு படிப்படியாக தமிழ் வானொலி நிலையங்களை அடைக்கவிருப்பதாக எம்.பி வெங்கடேசன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து எம்.பி வெங்கடேசன் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, பிரசார் பாரதி, “ஒரு மாநிலத்தில் ஒரு முதன்மை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையம்” என்று நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருக்கிறது என்றும் பொங்கல் பண்டிகை முதல் அது செயல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியானது. தமிழகத்தில், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, புதுச்சேரி, திருச்சி மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த வானொலி […]

Categories
அரசியல்

முதலமைச்சரிடம் சென்ற ரிப்போர்ட் கார்டு…. பீதியில் உறைந்த அமைச்சர்கள்…!!

தமிழக முதல்வருக்கு சரியாக செயல்படாத அமைச்சர்களின் பட்டியல் அனுப்பப்பட்டிருப்பதால், அவர்கள் பதவி பறிபோகும் பயத்தில் உள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் ஆட்சியில் பல துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்படும் இலவச புத்தக பையில், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தையும் அகற்ற வேண்டாம் என்று கூறியதில் தொடங்கி சமீபத்தில் தொடங்கப்பட்ட, “மீண்டும் மஞ்சப்பை” இயக்கம் வரை ஸ்டாலினின் […]

Categories
அரசியல்

இதை ஏற்க முடியாது…. நடிகர் சித்தார்த்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜோதிமணி….!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான ஜோதிமணி நடிகர் சித்தார்த், சாய்னா நேவால் குறித்து பாலியல் ரீதியாக விமர்சித்ததை எதிர்த்திருக்கிறார். சாய்னா நேவால் பஞ்சாப்பில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டது  தொடர்பில் கருத்து பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த நடிகர் சித்தார்த், குறிப்பிட்டிருந்த வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி, “நம் அனைவரையும் போன்று சாய்னா நேவாலுக்கும் தன் அரசியல் கருத்துக்களை கூறும் உரிமை உள்ளது. […]

Categories
அரசியல்

தி.மு.க ஆட்சிக்கு எதிராக சாலை மறியல்…. கூட்டணிக்கட்சி எம்எல்ஏ-வால் பரபரப்பு…..!!!

திமுக ஆட்சியை எதிர்த்து சாத்தூர் தொகுதியில் ம.தி.மு.க எம்எல்ஏ ரகுராமன் சாலைமறியலில் ஈடுபட்டிருக்கிறார். விருதுநகரில் இருக்கும் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் கீழராஜகுலராமன் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு பண்டகசாலையில் உள்ள ஒரு நியாய விலைக் கடையில் முதலமைச்சர் அறிவித்த பொங்கல் சிறப்பு பரிசு பொருட்கள் சரியாக கொடுக்கப்படவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த நியாய விலை கடையின் விற்பனையாளர் முறைகேடு செய்கிறார் என்று வெம்பக்கோட்டை வட்டாட்சியர் தனசேகரனிடம் புகார் அளித்த மக்களை, அவர் இனரீதியாக கடும் […]

Categories
அரசியல்

‘இந்தாங்க இந்த 25 லட்சத்தை அட்வான்ஸா வச்சுக்கோங்க’…. கவுன்சிலர் சீட் கொடுங்க…. ஷாக் கொடுத்த பாஜக பிரமுகர்….!!!

25 லட்சத்தை கொடுத்து கவுன்சிலர் சீட், கேட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, கவுன்சிலர் உட்பட பல பதவிகளுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நேர்காணல் தமிழ்நாட்டின் பாஜகவால் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக பலர் விருப்ப மனு கொடுத்திருந்தார்கள். அவர்கள், நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டார்கள். அப்போது, ஆலந்தூர் மண்டலத்தின் 156 வது வார்டில், சிவப்பிரகாசம் என்ற நபர் போட்டியிடுவதற்கு விருப்ப மனு கொடுத்திருந்தார். இவர் உள்ளாட்சித் தேர்தலுக்காக ஒரு […]

Categories
அரசியல்

“உதயநிதிக்கு டெய்லி டியூஷன் எடுக்கும் அதிகாரிகள்”….. ஓ இதுக்கு தானா….? நடத்துங்க…. நடத்துங்க….!!!!

உதயநிதி ஸ்டாலினுக்கு சில அதிகாரிகள் அரசியல் நடைமுறை தொடர்பில் பாடம் கற்றுக் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் முடிந்து, தி.மு.க தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்தது. அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த துறை கொடுக்கப்படும்? என்று கட்சி நிர்வாகிகளிடையே கேள்வி எழுந்தது. மு.க.ஸ்டாலின் இருந்த உள்ளாட்சித்துறை தான் வழங்கப்படும் என்றும் ஒரு கருத்து இருந்தது. ஆனால், அமைச்சரவை பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் பெயர் இடம்பெறவில்லை. முதலமைச்சராக பதவியேற்றவுடன், “வாரிசு அரசியல்” என்ற […]

Categories
அரசியல்

தமிழகத்தில் வானொலி நிலையங்களை மூடாதீங்க…. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்….!!!

பா.ம.க வின் இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ், வானொலி நிலையங்கள் முடக்கப்படுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் பணியை இழப்பார்கள் என்று கூறியிருக்கிறார். பா.ம.க வின் இளைஞரணித்தலைவரான அன்புமணி ராமதாஸ், இது தொடர்பில் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, நெல்லை, கோவை, புதுவை, திருச்சி மற்றும் மதுரை போன்ற வானொலி நிலையங்களில் தயாரிக்கப்படும் சொந்த நிகழ்ச்சியை பொங்கல் பண்டிகையோடு முடக்கிவிட்டு, அதனை தொடர் ஒளிபரப்பு நிலையங்களாக தரம் குறைப்பதற்கு பிரசார்பாரதி முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், வானொலி நிலையங்களை மூடக்கூடிய இத்தீர்மானம் […]

Categories
அரசியல்

“பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும்…. அவமானப்படுத்த முடியாது”…. நடிகர் கமலஹாசன்…!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் பெரியாரின் சிலைக்கு மர்மநபர்கள் செருப்பு மாலை அணிவித்தனர். இதனை பலரும் கண்டித்து வருகிறார்கள். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமலஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும்,வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது. […]

Categories
அரசியல்

“இது 12-வது உயிர்!”…. இனியும் தாமதம் வேண்டாம்…. உடனே நிறுத்துங்க…. அன்புமணி ராமதாஸ் அதிரடி….!!

பா.ம.க இளைஞர் அணியின் தலைவராகவும், மக்களவையின் உறுப்பினராகவும் இருக்கும் அன்புமணி ராமதாஸ் இணையதள சூதாட்டத்திற்கு எதிராக டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருக்கிறார். அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, சென்னையில் உள்ள கோயம்பேட்டில் வசிக்கும் தினேஷ் என்னும் இளைஞர் இணையதள சூதாட்டத்தில் அதிகமான பணத்தை இழந்து கடன் தொல்லையால் இன்று தூக்கு மாட்டி தற்கொலை செய்திருக்கிறார். அவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஐந்து மாதங்களில் இணையதள சூதாட்டத்தால் பலியாகும் 12வது உயிர் இது. இணையதள சூதாட்டம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அத்து மீறிய அர்ஜூன் சம்பத்…. அலேக்காக தூக்கிய போலீஸ்…. சேலத்தில் பரபரப்பு….!!!!

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்றிருந்த போது விவசாயிகள் வழிமறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டு திரும்பி செல்லும் சூழ்நிலை உருவானது. இந்த சம்பவம் தேசிய அளவில் பேசும் பொருளாக மாறி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் பஞ்சாபில் ஆளும் கட்சியான காங்கிரஸ் பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி பாஜகவினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சேலம் சந்திப்பில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் […]

Categories
அரசியல்

‘விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறாங்க’…. துயர் துடைக்குமா தமிழக அரசு….? ராமதாஸ் கேள்வி….!!!!

கரும்பு கொள்முதலால் ஏற்பட்ட பிரச்சினையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக  தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்காக பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ஒரு கரும்பும் கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதற்காக, கடலூர் விவசாயிகள் வைத்த கோரிக்கைக்கு ஏற்ப ஒரு கரும்பு 33 ரூபாய் என்ற அடிப்படையில் மொத்தமாக நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. எனினும், பொங்கல் பரிசு பொருட்கள் கொடுக்க தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நம்ம எம்எல்ஏ இந்த வேலை தான் பாக்குறாரா?”…. பெண்ணுடன் ‘ரொமான்ஸ் டாக்’…. லீக்கான ஆடியோ….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜ் தான் ஒரே அதிமுக எம்எல்ஏ என்று அதிமுக மேலிடம் மார்தட்டி கொண்டிருந்தது. ஆனால் அதனை உடைக்கும் வகையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் செல்போனில் அதிமுக மகளிரணி நிர்வாகியுடன் கொஞ்சும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த பலான ஆடியோவில் அதிமுக மகளிரணி நிர்வாகி எம்எல்ஏ மான்ராஜிடம் “டேய்…. உன் நினைப்பில் தான் படுத்திருக்கிறேன்” என சன்னக்குரலில் சினுங்கி பேச ஆரம்பித்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமர் உயிருக்கு இல்ல!…. அவர் சேர்ருக்கு தான் ஆபத்து…. கிண்டல் செய்த முன்னாள் முதல்வர்….!!!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு பஞ்சாப் சென்றிருந்த நிலையில் பாதுகாப்பு குளறுபடி காரணமாக பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு திரும்பி சென்றுவிட்டார். மேலும் டெல்லிக்கு திரும்பி செல்லும் போது பிரதமர் மோடி அங்கிருந்து விமான நிலைய அதிகாரிகளிடம் நான் பஞ்சாபில் இருந்து பதிண்டா விமான நிலையத்திற்கு உயிருடன் வந்தடைந்ததற்கு உங்களுடைய முதல்வருக்கு நன்றி என்று கூறிவிட்டு சென்றுள்ளார். பிரதமர் மோடியின் இந்த வார்த்தை சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இனி இவர் நமக்கு தேவை இல்ல!”…. திமுகவின் பக்கா ஸ்கெட்ச்…. ஐபேக்கிற்கு செக் வைத்த ஸ்டாலின்….!!!!

கடந்த 2014-ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் என்ற நிறுவனம் மோடியை பிரதமராக்கி ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தது. ஆனால் தேர்தல் வியூகங்களை வகுக்க இந்திய அரசியல் களத்தில் இது போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியை நாடவேண்டிய சூழல் வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஐபேக் நிறுவனத்தின் பின்னால் செல்ல தொடங்கியது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கு பிரசாந்த் […]

Categories
அரசியல்

“மக்களை முட்டாளாக்கத் தான் இந்த பாதயாத்திரை!”…. காங்கிரஸை விமர்சித்த பாஜக முதல்வர்….!!!

மேகதாது குடிநீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்த கோரிக்கை விடுத்து காங்கிரஸ் சார்பாக  மேற்கொள்ளப்படும் பாதயாத்திரைக்கு கர்நாடக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கர்நாடக அரசாங்கம் காவிரியின் இடையில் மேகதாது அணையை கட்ட தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கு, தமிழ்நாட்டு அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவராக இருக்கும் சிவகுமார், மேகதாது அணை திட்டத்தை விரைவாக செயல்படுத்துமாறு கோரிக்கை விடுத்து 168 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்ளப்போவதாக சமீபத்தில் கூறியிருந்தார். அதன்படி, இன்று காலையில் பாதயாத்திரை […]

Categories
அரசியல்

27 சதவீத இடஒதுக்கீடு…. ‘அத நீங்க கொண்டாடுவது கேலிக்கூத்தா இருக்கு’…. ஓபிஎஸ்-ஈபிஎஸ் கண்டனம்….!!!

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவரும் 27% இட ஒதுக்கீடு தீர்ப்பை தி.மு.க கொண்டாடுவ து கேலியாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்கள். அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மருத்துவ பட்ட படிப்புகளுக்கு இந்தியாவிற்கான ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 27% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்திருக்கிறது. இதனால், அ.தி.மு.க.வின் தீவிர போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த தீர்ப்பிற்கு  […]

Categories
அரசியல்

“தமிழர்களுக்கு பாஜக மிகப்பெரிய துரோகம் செய்கிறது!”….. கனிமொழி எம்.பி ஆவேசம்….!!

கனிமொழி எம்.பி. நீட் தேர்விற்கு பாஜக ஆதரவு தெரிவிப்பது தமிழர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் என்று கூறியிருக்கிறார். தி.மு.கவின் எம்பி கனிமொழி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, தி.மு.க. மட்டுமல்லாமல், பல அரசியல் இயக்கங்கள் மற்றும் மக்கள் எதிர்க்கும் நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகமாக பாதிப்படைகிறார்கள். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை. எனவே, அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறோம். சட்டமன்றத்தில் நீட் தேர்வை எதிர்த்து முதல்வர் பல தடவை பேசியுள்ளார். […]

Categories
அரசியல்

கூட்டத்துக்கு ஆள் சேரல போல…. ‘அதான் இப்படி ட்ராமா போட்டுக்கிட்டு இருக்காரு’…. கே.எஸ் அழகிரி காட்டம்…!!!

தமிழகத்தின் காங்கிரஸ் கட்சி தலைவரான கே எஸ் அழகிரி, பாஜகவினர் பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்று கூறி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே எஸ் அழகிரி, பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் மக்கள் கூடவில்லை என்பதால் தான் அவர் பயணத்தை ரத்து செய்திருக்கிறார். அதனை மறைப்பதற்காகவே அவர்கள் நாடகமாடுகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இதுபற்றி அவர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “பிரதமர், பஞ்சாப் பயணம் மேற்கொண்டதை  அரசியலாக்கி, முடிந்தவரைக்கும் லாபத்தை தேடும் முயற்சி […]

Categories
அரசியல்

2017…. பாஜகவிற்கு ரொம்ப ராசியான வருஷம் அது….!  மீண்டும் உ.பி.,யில் வரலாறு திரும்புமா?….!!!

சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாஜக கட்சிக்கு, கடந்த 2017 ஆம் வருடத்திற்கான வரலாறு மீண்டும் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப், உத்திரபிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் நேற்று அறிவிக்கப்பட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் வெற்றி பெறுவதற்கு அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு வருகிறது. அம்மாநிலத்தில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைப்பது மட்டுமல்லாமல் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் பெரிய வாய்ப்பும் கிடைக்கும். கடந்த […]

Categories
அரசியல்

நீட் தேர்வு….  அதப்பத்தி எதாவது உங்களுக்கு தெரியுமா…? சபையில் இருந்து படாரென வெளியேறிய வானதி…..!!

நீட் தேர்விற்கு எதிரான தீர்மானம் குறித்த கூட்டத்திலிருந்து, பாஜக சார்பில் பங்கேற்ற வானதி வெளிநடப்பு செய்தார். இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த ஐந்தாம் தேதி அன்று, தொடங்கியது. இக்கூட்டத்தின் இரண்டாம் நாளில் நீட் தேர்வை விலக்குவதற்கான அரசின் நிலை தொடர்பில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, “நீட் தேர்வை எதிர்த்து நடக்கும் நம் போராட்டம் சிறிதளவும் பின்வாங்காமல் முன்னோக்கி செல்லவேண்டும். இதற்கான, நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நாளை மறுநாள் கூட்ட தீர்மானித்திருக்கிறோம். […]

Categories
அரசியல்

“உயிருக்கு பயந்தா, அரசியல்ல இருக்கக் கூடாது!”…. ஒரே போடாய் போட்ட சன்னி…. கொந்தளித்த பாஜக…!!!!

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, முதல்வரை மறைமுகமாக விமர்சித்தது, பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் மாநிலத்திற்கு பல திட்டங்களை துவக்கி வைப்பதற்கு சென்றார். அவர் முதலில் ஹெலிகாப்டரில் வருவதாகத் தான் கூறப்பட்டிருந்தது. ஆனால் வானிலை மோசமடைந்ததால் சாலை வழியாக வந்தார். ஹூசைன் வாலா எனும் பகுதியில் இருக்கும் தேசிய தியாகிகளின் நினைவிடத்திற்கு பிரதமர் மோடி முதலில் செல்வார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த பகுதிக்குள் பிரதமரின் வாகனம் செல்வதற்கு முன்பாக, அங்கு செல்லக்கூடிய […]

Categories
அரசியல்

இதையெல்லா செஞ்சது யாரு….? அடுக்கடுக்கா கேள்வி எழுப்பி….. எதிர்கட்சியினரின் வாயை அடைத்த ஸ்டாலின்…..!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் கலைஞரின் எந்த திட்டங்களையெல்லாம் அதிமுக அரசு நீக்கியது எனது பற்றி அடுக்கடுக்காக கேள்வி கேட்டிருக்கிறார். சட்டப்பேரவையில், அம்மா மினி கிளிக்குகள் மற்றும் அம்மா உணவகத்தை கவனிக்காதது  தொடர்பில் எதிர்க்கட்சியினர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், அம்மா உணவகத்தை சரியாக கவனிக்கவில்லை என்று எதிர்க்கட்சித்தலைவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறான பட்டியல்களை வாசிக்க வேண்டும், எனில் என்னிடம் அது நிறைய இருக்கிறது என்று கூறியிருக்கிறார். […]

Categories
அரசியல்

“உயிர்பலிகள் அதிகரிக்கிறது!”…. தமிழக அரசே இவ்வளவு மெத்தனம் வேண்டாம்…. பொங்கிய சீமான்…..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், உயிர்ப்பலிகள் அதிகரிப்பதால், இணையதள சூதாட்டத்திற்கு தடை விதிக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தமிழகத்தில் மீண்டும் இணையதள சூதாட்டத்தால் உயிர்ப்பலிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இது கடும் அதிர்ச்சி மற்றும் வேதனையை தருகிறது. திமுக அரசு, ஆட்சிக்கு வந்தவுடன் இணையவழியில் நடக்கும் சூதாட்ட விளையாட்டுகளுக்கு முற்றிலுமாக தடை விதிப்போம் என்று அறிவித்திருந்தது. ஆனால், தற்போது வரை அதற்குரிய எந்தவித […]

Categories
அரசியல்

நாற்காலிகள் காலியாக இருந்தா…. அதுக்கு இவரு எப்படி பொறுப்பாவாரு…..? கொதித்த ஜோதிமணி எம்.பி….!!

காங்கிரஸ் கட்சியின் எம்பியான ஜோதிமணி, பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில், நாற்காலிகள் காலியாக இருந்ததால், அவர் திரும்பி சென்றதற்கு பஞ்சாப் முதல்வர் எப்படி பொறுப்பாவார்? என்று கேட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் எம்.பியான ஜோதிமணி தெரிவித்திருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடியை பஞ்சாப் மாநிலத்திற்குள் வரவிடாமல் விவசாயிகள் தடுத்துள்ளனர். ஒரு வருடமாக கடுமையான குளிர் மற்றும் மழையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில், 700 விவசாயிகள் உயிரிழந்தனர். மேலும், அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்தார். […]

Categories
அரசியல்

காங்கிரசின் மாநில கொள்கை…. 5 மாநிலங்களுக்கு தெரியப்படுத்துவோம்…. எச்.ராஜா அதிரடி….!!

பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா காங்கிரஸ் தெரிவித்த கருத்தை 5 மாநிலங்களுக்கு தெரியப்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார். காங்கிரசின் தமிழ் மாநில தலைவரான கே.எஸ் அழகிரி, “ஸனாதன தர்மம் சமூகத்தில் இருக்கக்கூடிய  வேறுபாடுகளை நியாயப்படுத்துகிறது. அது, இந்து மதத்தில் இடையில் சேர்க்கப்பட்டது. நாகரீக சமூகம் எதுவும் இதனை ஏற்றுக் கொள்ளாது. இதுவே காங்கிரஸின் கொள்கை” என்று கூறியிருக்கிறார். இந்நிலையில், தமிழ்நாட்டின் பாஜக செய்தி தொடர்பாளரான நாராயணன் திருப்பதி இது குறித்து தெரிவித்திருப்பதாவது, “ஸனாதன தர்மம் என்பது மதம் கிடையாது. […]

Categories
அரசியல்

மோடி வரும்போது இந்துக்கள் அசைவம் உண்ணக்கூடாதா….? இது என்ன புரளி…. விளக்கமளித்த பாஜக….!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தரும்போது, இந்துக்கள், அசைவம் சாப்பிடக்கூடாது என்று எஸ்.ஆர்.சேகர் கூறியதாக வெளியான செய்திக்கு அவர் விளக்கமளித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையானது, கோயில்களிலிருந்து வரும் வருமானங்களை வைத்து மீன் சந்தை கட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனை கடுமையாக எதிர்த்த தமிழ்நாட்டின் பாஜக தலைவரான அண்ணாமலை, மீன் சந்தைகளை அரசாங்கம் கட்டிகொடுக்க வேண்டுமா? அல்லது திருக்கோயில்கள் மூலம் கட்டப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். ஆனால், அவர், “மீன் சாப்பிடுபவர்கள் எவரும் இந்துக்கள் […]

Categories
அரசியல்

“சும்மா அரைச்ச மாவையே அரச்சுகிட்டு!”…. ஆளுநரின் பேச்சு மொத்தத்துல வேஸ்டு…. கடுப்பான அண்ணாமலை….!!

பாஜகவின் மாநிலத்தலைவரான அண்ணாமலை, ஆளுநரின் பேச்சு, நமத்துப்போன பட்டாசு என்று கூறியிருக்கிறார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, ஆளுநர் உரையாற்றிய சமயத்தில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தார்கள். இந்நிலையில் பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலை ஆளுநரின் உறை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், வழக்கமாக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது மாநிலத்தின் ஆளுநர் உரையாற்றி தொடக்கி வைப்பது தான், பல காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், “ஆளுநரின் உரை, எப்போதும் ஆளும் கட்சி தயாரித்து கொடுத்து, அவர்களுக்கான அரசியல் […]

Categories
அரசியல்

எல்லா கட்டுப்பாடும் சரி தான்….! டாஸ்மாக்கை மட்டும் ஏன் மூடல….? சரமாரியாக கேள்வி எழுப்பும் டிடிவி…..!!!

அமமுக பொது செயலாளரான டிடிவி தினகரன், தமிழகத்தில் கொரோனா காரணமாக பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியிருக்கும் முதல்வர் ஸ்டாலின் டாஸ்மாக்கை அடைக்காததற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். தமிழ்நாட்டில் கொரோனா தீவிரத்தை குறைக்க பல புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், நாளையிலிருந்து நாடு முழுக்க இரவு நேரத்தில் ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை இணையதள வகுப்புகள், மருத்துவம் தவிர கல்லூரிகள் அனைத்திற்கும் இம்மாதம் 20ஆம் தேதி வரை […]

Categories
அரசியல்

இத்தன நாளா எங்க இருந்தாரு இவரு….? சரியா சிக்கிய பாஜக….! தொடர்பில் இருந்த முக்கிய தலைவர்கள் யார்….?

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பாஜகவினர் அடைக்கலம் கொடுத்தது  தெரியவந்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார்.  சென்னை உயர் நீதிமன்றத்தில், அவர் முன்ஜாமீன் கேட்டு கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பிறகு, காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார். எனவே, 6 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் சுமார் 20 நாட்களாக அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கர்நாடகாவில் ஹசன் சாலையில், ராஜேந்திர பாலாஜி ஒரு வாகனத்திலிருந்து இறங்கி வேறு […]

Categories
அரசியல்

இந்தா வந்துட்டாருல்ல நம்ம தலைவரு….! திரளாக குவிந்த கூட்டம்…. களைகட்டிய சிறை வளாகம்….!!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பண மோசடி வழக்கில், சுமார் 20 நாட்களாக தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி தனிப்படை காவல்துறையினரால் கர்நாடகாவில் நேற்று கைது செய்யப்பட்டார். தற்போது, அவரை தனிப்படை காவல்துறையினர் விருதுநகர் மாவட்டத்தின் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ராஜேந்திரபாலாஜியை அங்கு அழைத்து வருகிறார்கள் என்பதை அறிந்த முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரான, எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் நூற்றுக்கும் அதிகமான அதிமுகவினரை  மாவட்ட […]

Categories
அரசியல்

“தொடர்ந்து சரிந்து கொண்டே போகுதே”…. என்ன பண்ணலாம்…. திடீர் ஆலோசனையில் குதித்த கர்நாடகா பாஜக….!!!

கர்நாடகாவில் பாஜகவின் மூன்று நாட்கள் ஆலோசனைக் கூட்டமானது, பெங்களூரில் வரும் வெள்ளிக்கிழமை அன்று தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற மேலவை மற்றும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக-விற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்கு என்ன செய்யலாம்? என்பது தொடர்பிலும், கட்சியை பலமாக்குவது தொடர்பிலும் விவாதிப்பதற்காக ஆலோசனை நடத்துவதற்காக 3 நாட்கள் கூட்டத்திற்கு கர்நாடகாவின் பாஜக ஏற்பாடு செய்திருக்கிறது. பெங்களூரில் வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது. இதில், கட்சியை […]

Categories
அரசியல்

பொங்கலுக்கு தரவேண்டிய பணத்த கூட தரல…. என்னத்த சொல்ல….! அடுக்கடுகா குற்றம் சாட்டிய எடப்பாடி….!!!!

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியிருக்கிறார். ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் தமிழ்நாட்டின் சட்டசபை கூடும் போது ஆளுநர் உரையாற்றுவது வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடத்தின் தொடக்கத்திலும் சட்டசபை கூட்டமானது, இன்று தொடங்கியிருக்கிறது. அதன்படி சென்னை கலைவாணர் அரங்கில், நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநரின் உரையின் போது அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தார்கள். அதன் பின்பு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் […]

Categories
அரசியல்

காவி வேட்டி, டி-சர்ட்டுடன்…. ராஜேந்திர பாலாஜிய அலேக்கா தூக்கிய காவல்துறை…. வெளியான பரபரப்பு வீடியோ…..!!

கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜியை தனிப்படை காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்திருக்கிறார்கள். முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, அரசுத் துறைகளில் பணி வாங்கி கொடுப்பதாக கூறி, 3 கோடியே 10 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பிறகு, அவர் தலைமறைவானார். எனவே, காவல்துறையினர் அவரை தேடும் பணியை தீவிரமாக மேற்கொண்டனர். இதற்காக 6 […]

Categories
அரசியல்

இனிமே இப்படி பண்ண வேண்டாம்…. புது பிளானை கையில் எடுத்த காங்கிரஸ்…. வெற்றி கிடைக்குமா?….!!!

காங்கிரஸ் கட்சி, பெண்களுக்காக ஏற்பாடு செய்திருந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை தள்ளி வைப்பதாக தெரிவித்துள்ளது. உத்திரபிரதேசத்தில் வரும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே பல அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று பரவுவதால், பல விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே, பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் அரசியல் கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதில் உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி, பிரியங்கா காந்தியின்  தலைமையில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. […]

Categories
அரசியல்

இப்பவே இப்படியா….? மோடி வருகைக்கு கிளம்பும் எதிர்ப்பு…. பஞ்சாப்பில் சலசலப்பு….!!

பிரதமர் நரேந்திரமோடி சட்டமன்ற தேர்தலுக்காக பஞ்சாப்பிற்கு வருகை தரும் நிலையில் பல விவசாய அமைப்புகள் அவரின் வருகையை கடுமையாக எதிர்த்துள்ளன. பஞ்சாப் உட்பட ஐந்து மாநிலங்களில் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது, பஞ்சாப் மாநிலத்திற்கு மோடி வருகை தர இருக்கிறார். இந்நிலையில், பிரதமரின் வருகையை பஞ்சாப் மாநிலத்தின் பல விவசாய அமைப்புகள் எதிர்க்கின்றன. ஒரு வருடத்தை […]

Categories
அரசியல்

இந்த மாநிலத்தில….. “பாஜக ஜம்மென்று ஆட்சிய பிடிக்க போகுதாமாம்”….  சர்வே எடுத்த பிரபல பத்திரிகை…!!!!

பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் உத்தரபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தெரியவந்திருக்கிறது. உத்திரபிரதேசம் உள்பட சுமார் 5 மாநிலங்களில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது? என்று ஊடகங்கள், மக்களிடம் கருத்துக் கணிப்புகள் நடத்துக்கொண்டிருக்கிறது. அந்தவகையில், பிரபல பத்திரிக்கை நடத்திய கருத்துக் கணிப்பில், உத்திரபிரதேசத்தில் மீண்டும் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. மொத்தமாக இருக்கும் 403 தொகுதிகளில் பாஜக, 230 இலிருந்து […]

Categories
அரசியல்

விசிக எதிர்க்க….  அதிமுக உரையை புறக்கணிக்க…. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே…! அடுத்தது திமுகவா….!!!

சென்னையில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநரை எதிர்த்து அதிமுக உறுப்பினர்களும், விசிக எம்எல்ஏ-க்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்ற கூட்டத் தொடரானது இன்று காலை 10 மணியளவில் தொடங்கப்பட்டது. இது தான், தமிழக சட்டப்பேரவையில் இந்த வருடத்தின் முதல் கூட்டம். எனவே ஆளுநர் ஆர் என் ரவி, கூட்டத்தொடரை துவக்கி வைத்தார். அவர் உரையாற்றிய போது அதிமுக கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள். ஆளுநர், நீட் விலக்கு மசோதாவிற்கு அனுமதி அளிக்காததற்க்கு எதிர்ப்பு […]

Categories
அரசியல்

48,154 கோடி நஷ்டம்…. இப்படி தா ஓடிக்கிட்டு இருக்கு.… அமைச்சர் பரபரப்பு பேட்டி…!!!!

தமிழ்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர், போக்குவரத்துத்துறை 48,154 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்று கூறி இருக்கிறார். தமிழ்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பன், பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருக்கிறது. எனினும், அதன் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் முதலமைச்சர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். எனவே, கொரோனா குறித்து கவலைப்படத் தேவையில்லை. பேருந்தில், பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார். அதனை கடைபிடிக்க […]

Categories
அரசியல்

“மோடி சரியான திமிரு பிடிச்சவரு”…. அவருடன் நா சண்டை போட்டே …. மேகாலய ஆளுநரின் வைரலாகும் வீடியோ ….!!

பிரதமர் நரேந்திர மோடி திமிர் பிடித்தவர் என்று மேகாலய ஆளுநர் கூறிய வீடியோ தற்போது இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஹரியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக், பேசிய  வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியதாவது, விவசாயிகளின் போராட்டம் நடைபெற்ற சமயத்தில், நான் பிரதமர் மோடியை சந்தித்தேன். அவரிடம், விவசாயிகள் போராட்டத்தில் 500க்கும் அதிகமானோர் பலியானதாக கூறினேன். घमंड…क्रूरता…संवेदनहीनता भाजपा के राज्यपाल के इस […]

Categories
அரசியல்

“இந்த வருடத்தோட ஆரம்பமே இப்படி இருக்கு”…. வேதனையுடன் ஓபிஎஸ் வைத்த முக்கிய கோரிக்கை….!!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் பட்டாசு ஆலை பணியாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வலியுறுத்தியிருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் புது வருட தொடக்கத்திலேயே ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அடுத்து இருக்கும் வடுகபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட களத்தூர் என்ற கிராமத்தில் ஆர்கேவிஎம் என்ற பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 4 பேர் பலியான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அந்த ஆலையில் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு பின் பணி நிறுத்தத்தில் […]

Categories
அரசியல்

கட்சி தான் தீர்மானிக்கும்….. அப்போ எதுக்கு இப்பவே துண்டு போடுறீங்க….? யோகி ஆதித்யநாத் மீது விமர்சனம்…..!!

சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், யோகி ஆதித்யநாத் சார்பில் பாஜக எம்.பி ஹர்நாத் சிங் யாதவ் முக்கிய கோரிக்கை வைத்திருக்கிறார். உத்திரபிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில் பாஜகவின் தேசிய தலைவரான ஜேபி நட்டாவிற்கு, யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர் மற்றும் பாஜகவின் எம்பியாக இருக்கும் ஹர்நாத் சிங் யாதவ் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில் கிருஷ்ண கடவுளால் அதிகமாக […]

Categories
அரசியல்

“எங்கள பலவீனமாக்க நினைக்காதீங்க…. சதி வேலைய தவுடுபுடியாக்குவோம்”…. ஹர்சிம்ரத் ஆவேசம்….!!!!

அகாலிதளக் கட்சியின் தலைவரான ஹர்சிம்ரத் கௌர் பாதல், எங்களை பலவீனமாக்க சதி வேலைகள் நடக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். பஞ்சாப்பில் நடைபெற்ற பெண்கள் கூட்டத்தில் பங்கேற்ற ஹர்சிம்ரத் பேசியதாவது, பஞ்சாப் மாநில மக்களின் நம்பிக்கை என் கட்சிக்கு மீண்டும் கிடைக்கும். எங்கள் கட்சியை பலவீனமாக்குவதற்கு சதி வேலைகள் நடக்கிறது. அதனை வென்று விடுவோம். இவ்வாறான  சதிவேலைகள் எங்களுக்கு புதிது இல்லை. எனினும் அதனை எதிர்கொண்டு வெல்வோம். பெண்கள் சக்திக்கு முன் எதுவும் நிற்க முடியாது என்று கூறியிருக்கிறார். […]

Categories
அரசியல்

“கட்சி நிர்வாகி மீது பாய்ந்த குண்டாஸ்”…. இது திட்டமிட்ட சதி, அரசியல் காழ்ப்புணர்ச்சி…. கொந்தளித்த சீமான்….!!!!

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும் பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை, அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக எதிர்த்திருக்கிறார். யூடியூபரான சாட்டை துரைமுருகன், இணையதளங்களில் வதந்தியை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி மற்றும் தமிழ்தேசிய ஊடகவியலாளராக இருக்கும் சாட்டை துரைமுருகன் மீது […]

Categories
அரசியல்

‘பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சர்’…. அமைச்சர் வீட்டு முன் கோஷம்…. ஸ்டாலினுக்கு புது சிக்கல்….!!!!

பொற்கால ஆட்சியின் பொல்லாத அமைச்சர் என்று செந்தில் பாலாஜியின் வீட்டு முன்பு போராட்டம் நடந்து வருகிறது. தற்போதைய திமுக ஆட்சியின் மதுவிலக்கு துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் வீட்டை முற்றுகையிட்டு இன்று காலையில் பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதாவது டாஸ்மாக் பார் டெண்டருக்கு விடப்படுவதில் முறைகேடு நடந்திருக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள், “பொற்கால ஆட்சியினுடைய பொல்லாத அமைச்சர்” என்று செந்தில் பாலாஜிக்கு எதிரான கோஷங்களை எழுப்புகிறார்கள். மேலும், “முதல்வரை நம்பி தான் […]

Categories
அரசியல்

“நம்ம தலைவரு இங்க தான் ஒளிஞ்சு இருக்காரா”….? டேக் டைவர்ஷன் போட்டு வண்டிய திருப்புன போலீஸ்….!!!!

முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜியை பெங்களூர், டெல்லி போன்ற இடங்களில் தேடி வந்த காவல்துறையினர் தற்போது கர்நாடகாவின் தங்கவயல் நகரத்தில் தேடிவருகிறார்கள். அதிமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் போன்ற அரசு நிறுவனங்களில் பணி வாங்கி கொடுப்பதாக கூறி பண மோசடி செய்தார். எனவே காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடத்தொடங்கியவுடன் அவர் தலைமறைவானார். மேலும், அவர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்பு அவர் தொடர்பில் காவல்துறையினர் […]

Categories
அரசியல்

அடக்கொடுமையே….! பொங்கலுக்கு பணம் கொடுக்கல…. “அதுக்கு மத்திய அரசு தா காரணமா”….?

மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் தமிழகத்தை புறக்கணித்தது பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கும் நிலையில், பொங்கலுக்கு ரொக்கம் கொடுக்காததற்கு என்ன காரணம்? என்று திமுகவினர் கூறியுள்ளனர். தைத்திங்கள் முதல் நாளன்று தமிழர்களால் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகைக்காக தமிழ்நாட்டில் இருக்கும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, சர்க்கரை, முந்திரி, பச்சரிசி, திராட்சை, ஏலக்காய் போன்ற பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும். அதன்படி இந்த வருடமும் பொங்கல் பண்டிகை அன்று 21 பொருட்கள், அரிசி […]

Categories

Tech |