மழை பெய்ய வேண்டி மரங்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் கோவை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் ஆனைமலை ஏ வி ஆர் நகரில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. மழை பெய்ய வேண்டி இந்த கோவிலில் உள்ள அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மழை இல்லாமலும், நோய் நொடி காரணமாகவும் மக்கள் பாதிக்கப்படும்போது அரச மரத்தை சிவபெருமான் […]
