ஈராக் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தியதில் ஐஎஸ் தீவிரவாதிகள் 5 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள் முதலில் சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். எனவே, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் உள்நாட்டு படைகள் அதிரடி தாக்குதல் மேற்கொண்டு ஐ.எஸ் தீவிரவாதிகளை வீழ்த்தியது. எனினும், ஐஎஸ் தீவிரவாதிகள் அமைப்பைச் சேர்ந்த சில குழு, ஈராக் நாட்டின் பாலைவனப்பகுதிகளில் பதுங்கியிருந்து, அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. எனவே, ஈராக்கின் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர், […]
