குறவன், குறத்தி என்று நினைத்து பராமரிக்காமல் இருந்த அய்யனார் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகில் சித்துப்பட்டியில் பல்லவர்கால அய்யனார் சிற்பம், பொற்கலை தேவியின் சிற்பம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த சிற்பங்களை அப்பகுதி மக்கள் குறவன், குறத்தி சிலை என்று நினைத்து பல தலைமுறைகளாக வழிபடாமல், பராமரிக்காமல் ஒதுக்கி வைத்தனர். கீரனூரை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய கள ஆய்வின்போது இந்த சிற்பங்கள் கி.பி 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. […]
