வீட்டில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமி விளையாட்டு பொருளில் இருந்த பேட்டரியை முழுங்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அயனாவரம் பி.ஈ.கோவில் வடக்கு மாடவீதி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் தனுஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனுஸ்ரீ வீட்டில் விளையாட்டு ஜாமான்களை வைத்து விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது விளையாட்டு பொருளில் இருந்த சிறிய பேட்டரியை சிறுமி வாயில் போட்டு முழுங்கியதாக தெரிகிறது. இதனை […]
